search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    அமெரிக்காவில் 51.49 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்

    அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.98 கோடியை தாண்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 98 லட்சத்து 04 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54,139 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 51.49 லட்சமாக உயர்ந்துள்ளது.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    அமெரிக்கா - 51,49,723
    பிரேசில் - 30,13,369
    இந்தியா - 21,52,020
    ரஷியா - 8,82,347
    தென் ஆப்பிரிக்கா - 5,53,188
    மெக்சிகோ - 4,75,902
    பெரு - 4,71,012
    சிலி - 3,71,023
    ஸ்பெயின் - 3,61,442
    ஈரான் - 3,24,692
    கொலம்பியா - 3,76,870
    இங்கிலாந்து - 3,09,763
    Next Story
    ×