என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் கொலை
Byமாலை மலர்5 Aug 2020 5:51 PM GMT (Updated: 5 Aug 2020 5:51 PM GMT)
அமெரிக்காவில் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் சர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென் (வயது 43). திருமணத்துக்கு பிறகு, அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் பிளானோ நகரில் கணவருடன் குடியேறினார். மூலக்கூறு உயிரியல் படித்துள்ள அவர், புற்றுநோயாளிகளை வைத்து ஆராய்ச்சி நடத்தி வந்தார். 2 மகன்கள் உள்ளனர்.
சர்மிஸ்தா சென், தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல், பிளானோ நகரில் ஒரு பூங்கா அருகே ஓட்டப்பயிற்சிக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. ஒரு கால்வாய் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்செயலாக தாக்கப்பட்டு, சர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பகாரி மான்கிரீப் (29) என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான். ஆனால், இந்த கொலை எப்படி நடந்தது என்று போலீசாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவும் எந்த தகவலும் வெளியிடவில்லை. சர்மிஸ்தா சென் கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென் (வயது 43). திருமணத்துக்கு பிறகு, அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் பிளானோ நகரில் கணவருடன் குடியேறினார். மூலக்கூறு உயிரியல் படித்துள்ள அவர், புற்றுநோயாளிகளை வைத்து ஆராய்ச்சி நடத்தி வந்தார். 2 மகன்கள் உள்ளனர்.
சர்மிஸ்தா சென், தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல், பிளானோ நகரில் ஒரு பூங்கா அருகே ஓட்டப்பயிற்சிக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. ஒரு கால்வாய் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
தற்செயலாக தாக்கப்பட்டு, சர்மிஸ்தா சென் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பகாரி மான்கிரீப் (29) என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான். ஆனால், இந்த கொலை எப்படி நடந்தது என்று போலீசாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவும் எந்த தகவலும் வெளியிடவில்லை. சர்மிஸ்தா சென் கொல்லப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X