search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
    X
    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

    நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு: 10 பேர் பலி

    நேபாளம் நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
    நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சீன எல்லையில் உள்ள மெலம்சி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஏழு பேர் பிர்கஞ்ச் இடத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.

    இரவு நேரத்தில் தற்காலிகமாக அமைக்கபட்ட கொட்டகை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்தனர். மற்றொரு இடத்தில் நிலச்சரிவால்  வீடு இடிந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×