search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பலி - திணறும் நாடுகள்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 92 ஆயிரத்து 348 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குறிப்பாக வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

    அமெரிக்கா - 1,58,365
    பிரேசில் - 94,130
    மெக்சிகோ - 47,472
    இங்கிலாந்து - 46,201
    இந்தியா - 37,364 
    Next Story
    ×