search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பிரிட்டனில் 3 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

    கொரோனா வைரசின் தாக்கத்தால், பிரிட்டனில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    லண்டன்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.64 கோடியைக் கடந்துள்ளது. 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் தற்போது 10-வது இடத்தில் உள்ளது. 

    இந்நிலையில், பிரிட்டனில் 685 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

    கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×