என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
அமெரிக்காவில் 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது.
நியூயார்க்:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவியவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 43 லட்சத்து 96 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 20 லட்சத்து 92 ஆயிரத்து 418 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த மாகாணங்கள்:-
நியூயார்க் - 32,689
நியூஜெர்சி - 15,872
கலிபோர்னியா - 8,455
Next Story