என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு ரூ.3,000 கோடி வழங்கும் ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கி கையெழுத்து
Byமாலை மலர்26 July 2020 7:09 AM GMT (Updated: 26 July 2020 7:09 AM GMT)
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.3,000 கோடி வழங்கும் ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு:
இலங்கையில், கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்த நாட்டு அரசு இந்தியாவின் உதவியை நாடியது.
அதன்படி இலங்கையின் அன்னியச் செலாவணி இருப்புகளை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,000 கோடி) பெற இலங்கை முடிவு செய்தது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை தகவல் தொடர்பு துறை மந்திரி, பந்துலா குணவர்த்தனே கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக இரு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் மட்டத்திலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மட்டத்திலும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
அதுமட்டுமின்றி இந்த ஒப்பந்தம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடனை திருப்பி செலுத்துவதை மறு சீரமைப்பது தொடர்பாக இருதரப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்த நாட்டு அரசு இந்தியாவின் உதவியை நாடியது.
அதன்படி இலங்கையின் அன்னியச் செலாவணி இருப்புகளை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,000 கோடி) பெற இலங்கை முடிவு செய்தது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை தகவல் தொடர்பு துறை மந்திரி, பந்துலா குணவர்த்தனே கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக இரு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் மட்டத்திலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மட்டத்திலும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
அதுமட்டுமின்றி இந்த ஒப்பந்தம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடனை திருப்பி செலுத்துவதை மறு சீரமைப்பது தொடர்பாக இருதரப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X