என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் நுழைய தடை: டிரம்ப் அரசு திட்டம்
Byமாலை மலர்17 July 2020 3:55 AM GMT
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளது.
வாஷிங்டன் :
சீனாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றன. சமீபத்தில் கூட கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு பதிலடிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாப்படி சீன கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் புதிதாக நுழைய தடை விதிப்பதுடன், ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் உறுப்பினர்களும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால் சீனா-அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. எனினும் இந்த திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீனாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றன. சமீபத்தில் கூட கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு பதிலடிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாப்படி சீன கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் புதிதாக நுழைய தடை விதிப்பதுடன், ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் உறுப்பினர்களும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால் சீனா-அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. எனினும் இந்த திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X