என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக சொந்த நாட்டை சேர்ந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்
Byமாலை மலர்14 July 2020 5:39 PM GMT (Updated: 14 July 2020 5:39 PM GMT)
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.
தெஹ்ரான்:
ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தங்களின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக அமெரிக்கா மீது ஈரான் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.
மேலும், ஈரானின் புரட்சிப்படை தளபதியான சுலைமானி ஈராக் தலைநகர் பாக்த்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்ப்ட்டார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையில், ஈரானின் ராக்கெட், அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சுலைமானியின் இருப்பிடம் குறித்த தகவல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு ரகசியமாக அளித்ததாக ரிசா அஸ்ஹரி மற்றும் முஹ்மத் மைஸ்வி மஜித் ஆகிய இரு ஈரானியர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் பணத்திற்காக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பியது உறுதியாகியுள்ளதாக ஈரான் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பையடுத்து முதல் நபராக ரிசா அஸ்ஹரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், மற்றொரு
குற்றவாளியான மஜித்துக்கு கூடிய விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக ஈரான் நாட்டில் பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X