என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி வந்துவிடும்- அமெரிக்க நிபுணர் நம்பிக்கை
Byமாலை மலர்10 July 2020 7:59 AM GMT (Updated: 10 July 2020 7:59 AM GMT)
கொரோனாவுக்கு தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி கூறினார்.
நியூயார்க்:
ஐ.நா. சபையின் கல்வி தாக்கம் பற்றிய ஆன்லைன் அமர்வில், அமெரிக்க தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகள் நம்பிக்கை அளித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனா வைரசிடம் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். அது கடினமான தொற்றுநோய். அது தொடர்ந்து பரவ வாய்ப்பு உள்ளது. அதைக்கட்டுப்படுத்துவதற்கு நல்ல பொது சுகாதார நடவடிக்கைகள் முக்கியம்” என்று கூறினார்.
மேலும், “மனித குலத்தின் மீதான அசாதாரணமான இந்த தாக்குதலில் இருந்து மீள வேண்டுமானால், உலகளாவிய ஒத்துழைப்பும், வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியமானவை. இந்த வைரஸ் நோய், விரைவாகவும், அதிகளவிலும் பரவுகிறது, அதிகளவில் இறப்புகளையும் ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டார்.
ஐ.நா. சபையின் கல்வி தாக்கம் பற்றிய ஆன்லைன் அமர்வில், அமெரிக்க தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தற்போது நடந்து வரும் கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகள் நம்பிக்கை அளித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனா வைரசிடம் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். அது கடினமான தொற்றுநோய். அது தொடர்ந்து பரவ வாய்ப்பு உள்ளது. அதைக்கட்டுப்படுத்துவதற்கு நல்ல பொது சுகாதார நடவடிக்கைகள் முக்கியம்” என்று கூறினார்.
மேலும், “மனித குலத்தின் மீதான அசாதாரணமான இந்த தாக்குதலில் இருந்து மீள வேண்டுமானால், உலகளாவிய ஒத்துழைப்பும், வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியமானவை. இந்த வைரஸ் நோய், விரைவாகவும், அதிகளவிலும் பரவுகிறது, அதிகளவில் இறப்புகளையும் ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X