search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பாகிஸ்தானில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை

    பாகிஸ்தானில் ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.
    இஸ்லாமாபாத்:

    உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

    இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 லட்சத்தை நெருங்குகிறது.

    தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,848 ஆக உயர்ந்துள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று 3 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

    உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×