என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒபேராவின் முன்பக்கத்தை சுகாதார பணியாளர்களின் படங்களால் அலங்கரித்து மரியாதை செலுத்திய கலைஞர்
Byமாலை மலர்9 July 2020 4:33 PM GMT (Updated: 9 July 2020 4:33 PM GMT)
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உயிரிழந்த சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கலைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வந்தனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்களின் அயராத அர்ப்பணிப்பால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டது.
ஆனால் கொரோனாவுக்கு எதிரான போரில் பல மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்த முன்பள பணியாளர்களுக்கு கலைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்த நினைத்தார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள ஒபேரா பாஸ்டைல் கட்டடத்தின் முன்பகுதியில் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் புகைப்படத்தால் அலங்கரித்தார்.
பிரான்சில் 1,69,473 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,965 பேர் உயிரிழந்தனர். 77,985 பேர் குணமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X