என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாங்காங்கில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்
Byமாலை மலர்8 July 2020 11:12 AM GMT (Updated: 8 July 2020 11:12 AM GMT)
ஹாங்காங்கில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்துவதாக ‘டிக்-டாக்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
பீஜிங்:
சீனாவின் ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ‘டிக்-டாக்’. பொழுது போக்கு செயலியான ‘டிக்-டாக்’ இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.
ஆனால் லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்து மீறிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும் ‘டிக்-டாக்’ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செயல்பாட்டைப் நிறுத்துவதாக ‘டிக்-டாக்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து ஹாங்காங்கில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சீனாவின் ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ‘டிக்-டாக்’. பொழுது போக்கு செயலியான ‘டிக்-டாக்’ இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.
ஆனால் லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்து மீறிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும் ‘டிக்-டாக்’ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செயல்பாட்டைப் நிறுத்துவதாக ‘டிக்-டாக்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து ஹாங்காங்கில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X