search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர்
    X
    சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர்

    பாகிஸ்தானை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 3344 பேருக்கு பாதிப்பு

    பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,344 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.31 லட்சத்தைக் கடந்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

    இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.31 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,31,818 ஆக உயர்ந்துள்ளது.

    அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1.31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

    உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து 12-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×