search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்தவர் - கோப்புப்படம்
    X
    சதம் அடித்தவர் - கோப்புப்படம்

    ‘சதம்’ அடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்டார்

    பாகிஸ்தானில் சதம் கடந்து தற்போது 105 வயதாகியுள்ள பசல் ரவுப் என்பவர் அதிசயமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    கொரோனா வைரஸ் தொற்று, வயதானவர்களைத்தான் அதிகளவில் குறிவைத்து தாக்குகிறது, அவர்களில் பலரது உயிரையும் பறிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் சதம் கடந்து தற்போது 105 வயதாகியுள்ள பசல் ரவுப் என்பவர் அதிசயமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

    அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான இவர், கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நாளில் இருந்து ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×