search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கடந்த ஒரு வாரமாக தினமும் புதிதாக 1 லட்சம் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா - அதிர்ச்சி தகவல்

    உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தினமும் புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    ஜெனிவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்
    டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், ’’கடந்த ஒரு வாரமாக தினமும் புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

    உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவிகிதம் கடந்த ஒரு மாதத்தில் உறுதி செய்யப்பட்டவர்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.   

    Next Story
    ×