என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இஸ்ரேலில் எம்.பி.க்கு கொரோனா- பாராளுமன்ற கூட்டத்தொடர் சஸ்பெண்ட்
Byமாலை மலர்5 Jun 2020 2:52 AM GMT (Updated: 5 Jun 2020 2:52 AM GMT)
இஸ்ரேல் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாராளுமன்ற கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெருசலேம்:
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சமி அபு ஷாகாதேவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று நடைபெறுவதாக இருந்த பாராளுமன்ற குழு கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள், ஊழியர்கள் வரவேண்டும் என்றும், மற்றவர்கள் வீடுகளில் இருந்தபடியே பணிகளை கவனிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இதுவரை 17343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 290 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X