search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ச்சுக்கல், பிரான்ஸ் எல்லையை திறக்கிறது ஸ்பெயின்
    X
    போர்ச்சுக்கல், பிரான்ஸ் எல்லையை திறக்கிறது ஸ்பெயின்

    பிரான்ஸ், போர்ச்சுக்கல் தரைவழி எல்லை ஜூன் 22-ல் இருந்து திறக்கப்படும்: ஸ்பெயின் அறிவிப்பு

    பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் தரைவழி எல்லையை ஜூன் 22-ல் தேதியில் இருந்து திறக்க இருப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில் கொரோனா தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. இதனால் சர்வதேச எல்லைகளை மூடியது. மேலும் நாடு தழுவிய பொது ஊரடங்கை பிறப்பித்தது.

    கடந்த மாதம் மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

    அந்த வகையில் ஜூன் 22-ந்தேதியில் இருந்து பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளுடன் உள்ள தரைவழி எல்லைகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×