என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு
Byமாலை மலர்2 Jun 2020 12:42 PM GMT (Updated: 2 Jun 2020 12:42 PM GMT)
இந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்று அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் எலியெட் ஏங்கள் குற்றம் சாட்டி உள்ளார்.
வாஷிங்டன்:
இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரு நாடுகளும் தங்களது படைகளை குவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் எலியெட் ஏங்கள் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-
இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பால் நான் கவலைப்படுகிறேன். சர்வதே சட்டத்தின்படி மோதல்களை தீர்ப்பதற்கு பதிலாக அண்டை நாடுகளை கொடுமைப்படுத்த சீனா தயாராகி இருப்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது.
நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்தியாவுடனான எல்லை பிரச்சினைகளை தீர்க்க சீனா மதிக்க வேண்டும். தூதரக மற்றும் நடை முறையில் உள்ள வழி முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று நான் கடுமையாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X