என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
Byமாலை மலர்28 May 2020 12:27 PM GMT (Updated: 28 May 2020 12:27 PM GMT)
கொரோனா பரவல் தொடர்பாக பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பெர்லின்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் சமூக தொடர்புகளை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பிட்டவர்களுடன் மட்டும் தொடர்பில் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் 11-ந் தேதி கொரோனா தொற்று குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அன்றிலிருந்து இதுவரை உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3½ லட்சத்தையும் தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 22 லட்சத்து 71 ஆயிரம் பேர் கொரோனா தாக்குதலில் இருந்து குணம் அடைந்து உள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் சமூக தொடர்புகளை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பிட்டவர்களுடன் மட்டும் தொடர்பில் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X