என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா மீது பாக். பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு
Byமாலை மலர்28 May 2020 10:41 AM GMT (Updated: 28 May 2020 10:41 AM GMT)
நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும், பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாக பாக். பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் வீண் பழிகளை சுமத்தி வருகிறது. மேலும் இந்தியாதான் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுடன் அண்டை நாடுகளான சீனாவும், நேபாளமும் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் விரிவாக்க கொள்கைகளில் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. வங்காள தேசத்துடன் குடியுரிமை சட்டத்தின் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதல்களாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
காஷ்மீரை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது இந்தியா செய்துள்ள போர்குற்றமாகும். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும் மட்டுமின்றி பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் வீண் பழிகளை சுமத்தி வருகிறது. மேலும் இந்தியாதான் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுடன் அண்டை நாடுகளான சீனாவும், நேபாளமும் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் விரிவாக்க கொள்கைகளில் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. வங்காள தேசத்துடன் குடியுரிமை சட்டத்தின் வாயிலாகவும், சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதல்களாலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
காஷ்மீரை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்துள்ளது இந்தியா செய்துள்ள போர்குற்றமாகும். நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கும் மட்டுமின்றி பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X