என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில் வன்முறை மோதல்கள் அதிகரிக்கும் அபாயம்
Byமாலை மலர்28 May 2020 8:28 AM GMT (Updated: 28 May 2020 8:28 AM GMT)
சீனாவில் கொண்டு வர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹாங்காங்:
சீன அரசு புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதுதொடர்பான வரைவு சட்ட மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங்கின் சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ஹாங்காங் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பிரிவனைவாதம், பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என சீன அரசு கூறுகிறது. ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருவது, வன்முறை மோதல்களை அதிகரிப்பதுடன், அமெரிக்காவிடமிருந்து பதிலடியையும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசு புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதுதொடர்பான வரைவு சட்ட மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங்கின் சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் வன்முறை மோதலாக வெடிக்கத் தொடங்கி உள்ளது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது.
போராட்டம் நடத்தும் மக்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடிக்கின்றனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசுகின்றனர். இப்போராட்டம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ஹாங்காங் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பிரிவனைவாதம், பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என சீன அரசு கூறுகிறது. ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருவது, வன்முறை மோதல்களை அதிகரிப்பதுடன், அமெரிக்காவிடமிருந்து பதிலடியையும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X