search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரஸ் தொற்றால் இறந்தவர்களை புதைக்கும் இடம்
    X
    வைரஸ் தொற்றால் இறந்தவர்களை புதைக்கும் இடம்

    அதிரும் பிரேசில் - கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

    பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியது.
    ரியோ டி ஜெனிரோ:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்க உள்ளது.

    இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    Next Story
    ×