search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோயாளி
    X
    கொரோனா நோயாளி

    பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு

    பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 32 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்துள்ளது. 
    Next Story
    ×