என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை - 2 ராணுவ வீரர்கள் பலி
Byமாலை மலர்23 May 2020 6:42 AM GMT (Updated: 23 May 2020 6:42 AM GMT)
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள், ராணுவ சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணம் படாக்சானில் யப்தல் இ பாலா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதே சமயம் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள், ராணுவ சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணம் படாக்சானில் யப்தல் இ பாலா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதே சமயம் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X