என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது: டிரம்ப்
Byமாலை மலர்23 May 2020 2:05 AM GMT (Updated: 23 May 2020 2:05 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது என்று ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார்.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுக்க கால் பதித்து பரவி வந்தாலும், அதன் வேகம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. 96 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியது. மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விட்டது. இதன்காரணமாக அங்குள்ள 50 மாகாணங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசினார். முன்னதாக அவர் தன் முக கவசத்தை அகற்றினார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இதைப் பார்க்கும் மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுக்கு நான் தர விரும்பவில்லை” என்று கூறினார்.
ஆனால் சுகாதார வழிகாட்டும் விதிமுறைகளுக்கு இணங்குமாறு டிரம்பை மிச்சிகன் மாகாண அட்டார்னி ஜெனரல் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை டிரம்ப் ஏற்கவில்லை. “கொரோனா வைரஸ் சோதனையை வழக்கமாக செய்து கொண்டு வருவதால் இது தேவையில்லை” என்று அவர் கூறிவிட்டார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.
நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல.
ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுக்க கால் பதித்து பரவி வந்தாலும், அதன் வேகம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. 96 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியது. மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விட்டது. இதன்காரணமாக அங்குள்ள 50 மாகாணங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசினார். முன்னதாக அவர் தன் முக கவசத்தை அகற்றினார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இதைப் பார்க்கும் மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுக்கு நான் தர விரும்பவில்லை” என்று கூறினார்.
ஆனால் சுகாதார வழிகாட்டும் விதிமுறைகளுக்கு இணங்குமாறு டிரம்பை மிச்சிகன் மாகாண அட்டார்னி ஜெனரல் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை டிரம்ப் ஏற்கவில்லை. “கொரோனா வைரஸ் சோதனையை வழக்கமாக செய்து கொண்டு வருவதால் இது தேவையில்லை” என்று அவர் கூறிவிட்டார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.
நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல.
ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X