என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த ஆண்டு முழுவதும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் - கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் அறிவிப்பு
Byமாலை மலர்10 May 2020 7:51 AM GMT (Updated: 10 May 2020 7:51 AM GMT)
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.
சான் பிரான்சிஸ்கோ:
கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க சொல்லி வலியுறுத்து வருகின்றன.
இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன. ஊரடங்கு முடியும் வரையிலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, ஜூன் 1-ந் தேதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூகுள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வாய்ப்பு இருப்பவர்கள், இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜூலை 6-ந் தேதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியிருந்த பேஸ்புக் நிறுவனம், பணியாளர்கள் விரும்பினால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.
கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க சொல்லி வலியுறுத்து வருகின்றன.
இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன. ஊரடங்கு முடியும் வரையிலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, ஜூன் 1-ந் தேதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூகுள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வாய்ப்பு இருப்பவர்கள், இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜூலை 6-ந் தேதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியிருந்த பேஸ்புக் நிறுவனம், பணியாளர்கள் விரும்பினால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X