search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    கொரோனா அச்சுறுத்தல் - நேபாளத்தில் விமான போக்குவரத்துக்கான தடை மே 15 வரை நீடிப்பு

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேபாள அரசு விமான போக்குவரத்துக்கான தடையை மே 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
    காத்மண்டு:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

    தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28  லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. 

    இதற்கிடையே, கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை நாடான நேபாளம் விமான சேவைக்கு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் உலகையே தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், நேபாள அரசு விமான போக்குவரத்துக்கான தடையை மே மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு பிரதமர் அலுவலக செயலாளர் நாராயண் பிதாரி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×