என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் 79 சதவீத கொரோனா தொற்று சமூக பரவல் மூலம் உருவானது - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
Byமாலை மலர்25 April 2020 8:03 AM GMT (Updated: 25 April 2020 8:03 AM GMT)
பாகிஸ்தான் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 79 சதவீதம் சமூக பரவல் மூலம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கு வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 642 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 11,155 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 237 ஆக உயர்ந்துள்ளது. 2,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 79 சதவீதம் சமூக பரவல் மூலம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், மே மாத இறுதி மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X