என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்தியர் நியமனம்
Byமாலை மலர்22 April 2020 6:11 AM GMT (Updated: 22 April 2020 6:11 AM GMT)
அமெரிக்காவில் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுதர்சனம் பாபு என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுதர்சனம் பாபு என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார். சுதர்சனம் பாபு, கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், 1988-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் (தொழிற்சாலை உலோக பிரிவியல், வெல்டிங்) பிரிவிலும் படித்து பட்டம் பெற்றார்.
அதன்பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார். சுதர்சனம் பாபு, அமெரிக்க தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் 3-வது இந்தியர் ஆவார். இதற்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய 2 பேரும் உறுப்பினர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X