search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது (கோப்பு படம்)
    X
    வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது (கோப்பு படம்)

    ஒரே நாளில் 2 ஆயிரத்து 800 பேர்... 45 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... நிலைகுலைந்த அமெரிக்கா

    அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 802 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது.
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    தற்போதைய நிலவரப்படி, 25 லட்சத்து 56 ஆயிரத்து 421 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் கோரத்தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்

    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. 

    தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 8 லட்சத்து 19 ஆயிரத்து 805 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 27 ஆயிரத்து 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 802 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. 

    Next Story
    ×