என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 18 பேர் பலி
Byமாலை மலர்17 April 2020 10:36 PM GMT (Updated: 17 April 2020 10:36 PM GMT)
ஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 18 பேர் உயிரிழந்தனர்.
அங்காரா:
துருக்கி, ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து குர்திஷ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை பின்பற்றி வருகின்றனர்.
இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.
மேலும், இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஈராக் நாட்டின் கான்டில் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த குர்திஷ்தான் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து துருக்கி நாட்டின் விமானப்படைகள் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 18 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X