search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் அன்வர் மற்றும் அவர் கண்டுபிடித்த சாதனம்
    X
    டாக்டர் அன்வர் மற்றும் அவர் கண்டுபிடித்த சாதனம்

    ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள்

    ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய சாதனத்தை உருவாக்கிய டாக்டருக்கு அப்பகுதி பொதுமக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சுவாசத்தை நிறுத்தும் அளவிற்கு இந்த வைரஸ் தாக்கம் கொடூரமாக இருப்பதால், செயற்கை சுவாசம் வழங்கும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. உரிய நேரத்தில் வென்டிலேட்டர் பொருத்தப்படாவிட்டால், நோயாளியை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.

    அமெரிக்காவில் கொத்துக் கொத்தாக கொரோனா வைரசுக்கு மக்கள் பலியானதற்கு வென்டிலேட்டர் பற்றாக்குறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனை உணர்ந்த அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மருத்துவரான சவுத் அன்வர், ஒரு வென்டிலேட்டர் மூலம் ஒரே சமயத்தில் 7 நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கினார். 

    கார்களில் அணிவகுத்து வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் அன்வர்

    அவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர் அமெரிக்க மக்கள் மத்தியில் ஹீரோவாக உருவாகியிருக்கிறார். அவரது மருத்துவப் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சவுத் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டின் அருகே அப்பகுதி மக்கள் வரிசையாக கார்களில் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளனர். 

    கார்களுக்குள் இருந்தபடி வாழ்த்து பேனர்களை தாங்கியும், கைகளை அசைத்தும் சென்றனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த டாக்டர் அன்வர், பதிலுக்கு தானும் கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார். தன் மீது மரியாதையும் அன்பும் வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் அன்வர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார்.  

    மான்செஸ்டர் மெமோரியல் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் அன்வர், கனெக்டிகட் மாநில செனட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×