search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்பி (கோப்புப்படம்)
    X
    செல்பி (கோப்புப்படம்)

    செல்பி எடுக்க முயன்ற போது விபத்து- இளைஞரை காப்பாற்றிய போலீஸ் உயிருக்குப் போராட்டம்

    ரஷியாவில் செல்பி எடுக்க முயன்றபோது மாடியில் இருந்து தவறி விழ இருந்த இளைஞரை போலீசார் காப்பாற்றினர்.
    ரஷியா:

    மாஸ்கோவின் புறநகர் பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதில்லை.

    இந்தநிலையில் அன்டோன் கோஸ்லாவ் என்ற இளைஞர் வீட்டின் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்றார். அப்போது பிடிமானம் நழுவியதில் 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்.

    15 நிமிடங்களுக்கும் மேலாக அவரின் அலறல் சப்தம் யார் காதிலும் விழவில்லை. இந்நிலையில்தான் அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் இதனைப் பார்த்ததும் விரைந்து சென்று அந்த இளைஞரை காப்பாற்றினர். 
    Next Story
    ×