என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் 34 லட்சம் மாத்திரைகள் நன்கொடை - அமெரிக்கவாழ் இந்தியர் தாராளம்
Byமாலை மலர்9 April 2020 9:15 AM GMT (Updated: 9 April 2020 9:15 AM GMT)
அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக், சிந்து படேல் ஆகியோருக்கு சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனம், 34 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக், சிந்து படேல் ஆகியோருக்கு சொந்தமான ‘அம்னீல் பார்மசூட்டிக்கல்ஸ்’ மருந்து உற்பத்தி நிறுவனம், 34 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்துக்கு 20 லட்சம் மாத்திரைகளும், டெக்சாஸ் மாகாணத்துக்கு 10 லட்சம் மாத்திரைகளும் வழங்கி உள்ளது. லூசியானா மாகாணத்துக்கு 4 லட்சம் மாத்திரை வழங்கப்போவதாக கூறியுள்ளது.
மேலும், தனது ஆலைகள் மூலம் ஒரு வாரத்துக்குள் 2 கோடி மாத்திரைகள் உற்பத்தி செய்து, விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று சிராக், சிந்து படேல் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X