search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு - தென்கொரியாவில் அதிர்ச்சி

    தென்கொரியாவில் குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சியோல்:

    தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறுபடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி தென்கொரிய மருத்துவ விஞ்ஞானிகள் கூறும்போது, “இது வியக்க வைக்கும் விஷயம். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது. குணம் அடைந்தவர்களை கொரோனா மீண்டும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது” என்கின்றனர்.

    இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறுகையில், “இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவேண்டும். அதனால்தான் இது நடந்துள்ளது. என்னை பொறுத்துவரை குணம் அடைந்தவரை மறுமுறை கொரோனா தாக்க வாய்ப்பில்லை” என்றார்.
    Next Story
    ×