என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு - தென்கொரியாவில் அதிர்ச்சி
Byமாலை மலர்8 April 2020 2:58 AM GMT (Updated: 8 April 2020 2:58 AM GMT)
தென்கொரியாவில் குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சியோல்:
தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறுபடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி தென்கொரிய மருத்துவ விஞ்ஞானிகள் கூறும்போது, “இது வியக்க வைக்கும் விஷயம். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது. குணம் அடைந்தவர்களை கொரோனா மீண்டும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது” என்கின்றனர்.
இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறுகையில், “இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவேண்டும். அதனால்தான் இது நடந்துள்ளது. என்னை பொறுத்துவரை குணம் அடைந்தவரை மறுமுறை கொரோனா தாக்க வாய்ப்பில்லை” என்றார்.
தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறுபடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி தென்கொரிய மருத்துவ விஞ்ஞானிகள் கூறும்போது, “இது வியக்க வைக்கும் விஷயம். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது. குணம் அடைந்தவர்களை கொரோனா மீண்டும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது” என்கின்றனர்.
இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறுகையில், “இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவேண்டும். அதனால்தான் இது நடந்துள்ளது. என்னை பொறுத்துவரை குணம் அடைந்தவரை மறுமுறை கொரோனா தாக்க வாய்ப்பில்லை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X