search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வுகானை விட்டு வெளியேறும் சீனர்கள்
    X
    வுகானை விட்டு வெளியேறும் சீனர்கள்

    வுகான் நகரை விட்டு வெளியேறும் சீனர்கள்

    ஊரடங்கு தளர்த்ப்பட்டதையடுத்து சீனாவில் வுகான் நகரில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
    பீஜிங்:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    இந்த வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து ஆயிரத்து 628 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 81 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் தான் முதன் முதலில் இந்த கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. 

    இந்த வைரஸ் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டாலும் வைரசின் வீரியத்தை உணர்ந்த சீன அரசு ஜனவரி மாதம் தான் வுகான் நகருக்கு ஊரடங்கு அமல்படுத்தியது. 

    வுகானை விட்டு வெளியேறும் சீனர்கள்

    வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைபடுத்தப்பட்டனர். 

    பிற மாகாணங்களில் இருந்து வுகான் நகர் உள்ளிட்ட ஹூபேய் மாகாணத்தின் அனைத்து நகரங்களுக்கும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

    இதனால் வுகான் நகரில் இருந்து சீனாவின் பிற நகரங்களுக்கு வைரஸ் பரவும் வேகம் வெகுவாக குறைந்தது. 

    ஆனாலும், சீனாவில் 81 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா பரவியது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 3 ஆயிரத்து 331 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வைரஸ் பரவியவர்களில் தற்போது ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 211 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால், வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 77 ஆயிரத்து 167 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சீனாவில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அந்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. மேலும், புதிதாக வைரஸ் பரவவும் இல்லை. இதனால் அங்கு நிலைமை சீரடைந்து வருகிறது.

    இதையடுத்து, ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சீன அரசு நேற்று தளர்த்தியது. மேலும், ரெயில் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டது. 

    வுகானை விட்டு வெளியேறும் சீனர்கள்

    ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த வுகான் நகர மக்கள் ஆயிரக்கணக்கானோர் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி ஹூபேய் மாகாணத்தில் இருந்து குறிப்பாக வுகான் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சீனாவின் வேறு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

    வுகானில் இருந்து ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டதையடுத்து ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் ரெயில்களில் கூட்டம் குவிந்து வருகிறது.
    Next Story
    ×