search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகிழ்ச்சியில் மருத்துவ ஊழியர்
    X
    மகிழ்ச்சியில் மருத்துவ ஊழியர்

    கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
    ஜெனிவா:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

    பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் (202 நாடுகள்) இந்த வைரஸ் வேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், மருத்துவத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் தன்னலமற்ற சேவைகளால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர். 

    இந்நிலையில், உலகம் முழுவதும் 14 லட்சம் பேருக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 348 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    வைரஸ் பரவியவர்களில் இதுவரை 3 லட்சத்து 759 பேர் சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    வைரசிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடுகள் சில வருமாறு:-

    அமெரிக்கா - 21,316
    ஸ்பெயின் - 43,208
    இத்தாலி - 24,392
    பிரான்ஸ் - 19,337
    ஜெர்மனி - 36,081
    சீனா - 77,167
    ஈரான் - 27,039
    துருக்கி -  1,582
    சுவிஸ்சர்லாந்து - 8,704
    பெல்ஜியம் - 4,157
    கனடா - 3,922
    ஆஸ்திரியா - 4,046
    தென்கொரியா - 6,694
    ஆஸ்திரேலியா - 2,547
    டென்மார்க் - 1,491
    மலேசியா - 1,321

    Next Story
    ×