என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிப்பு- டிரம்ப்
Byமாலை மலர்7 April 2020 5:46 AM GMT (Updated: 7 April 2020 5:46 AM GMT)
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும், தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இதனை சரி செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையில் இதே நிலை நீடித்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கச்சா எண்ணெய் விலை இப்படியே இருந்தால் கணிசமான வரிவிதிப்பை அமல்படுத்துவேன். ஏனென்றால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். எங்களிடம் எங்கள் சொந்த எண்ணெய் இருக்கிறது. நான் வரிவிதிப்பை அமல்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு எண்ணெயை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும். அமெரிக்க எரிசக்தி துறையை பாதுகாப்பதற்கு இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அத்தியாவசியமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும், தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இதனை சரி செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையில் இதே நிலை நீடித்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கச்சா எண்ணெய் விலை இப்படியே இருந்தால் கணிசமான வரிவிதிப்பை அமல்படுத்துவேன். ஏனென்றால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். எங்களிடம் எங்கள் சொந்த எண்ணெய் இருக்கிறது. நான் வரிவிதிப்பை அமல்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு எண்ணெயை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும். அமெரிக்க எரிசக்தி துறையை பாதுகாப்பதற்கு இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அத்தியாவசியமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X