search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்
    X
    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்

    உலக அளவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது- 75 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

    உலகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
    ஜெனிவா:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. 
     
    இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 74 ஆயிரத்து 702 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து 698 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 ஆயிரத்து 249 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

    உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 16,523 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 13,341 பேர் இறந்துள்ளனர். நோய்த்தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்காவில் 10,876 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 8,911 பேரும், பிரிட்டனில் 5,373 பேரும், ஈரானில் 3,739 பேரும், சீனாவில் 3,331 பேரும் பலியாகி உள்ளனர். 

    Next Story
    ×