search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் வெளியே நடமாடும் காட்சி
    X
    மக்கள் வெளியே நடமாடும் காட்சி

    குறைந்த அபாய பகுதியாக 'வுகான்' நகரம் அறிவிப்பு - நாடு முழுவதும் மேலும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

    வுகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக அறிவிக்கப்பட்ட நிலையில் , நாடு முழுவதும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

    வுகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அறிவிக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்புநிலை திரும்பி வருவது தெளிவாகிறது. அதே சமயத்தில், நாடு முழுவதும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 5 பேர் உள்நாட்டினர். 3 பேர் இறந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளே இல்லாமல், மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×