என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த அபாய பகுதியாக 'வுகான்' நகரம் அறிவிப்பு - நாடு முழுவதும் மேலும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்6 April 2020 8:28 AM GMT (Updated: 6 April 2020 8:28 AM GMT)
வுகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக அறிவிக்கப்பட்ட நிலையில் , நாடு முழுவதும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வுகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அறிவிக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்புநிலை திரும்பி வருவது தெளிவாகிறது. அதே சமயத்தில், நாடு முழுவதும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 5 பேர் உள்நாட்டினர். 3 பேர் இறந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளே இல்லாமல், மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X