என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி
Byமாலை மலர்6 April 2020 1:15 AM GMT (Updated: 6 April 2020 1:15 AM GMT)
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது.
நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன.
நியூயார்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோறும் இதே அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக, 2½ நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்து வருகிறார்கள்.
இன்னும் 7 நாட்களில், நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, உச்சத்தை எட்டும் என்று அம்மாகாண கவர்னர் ஆன்ட்ரூ குவோமோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
நியூயார்க் மாகாணத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசங்கள், கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன. இவற்றை அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இந்த பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருப்பது வேதனையாக உள்ளது. நியூயார்க் மாகாணம் ‘ஆர்டர்’ செய்த 17 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் போதுமானவை அல்ல.
சீனா நன்கொடையாக அளித்த ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் வந்து சேர உள்ளன. இதற்காக சீன அரசுக்கும், அலிபாபா நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டம் பெற தயாராக இருக்கும் மருத்துவ மாணவர்களை மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது.
நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன.
நியூயார்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோறும் இதே அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக, 2½ நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்து வருகிறார்கள்.
இன்னும் 7 நாட்களில், நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, உச்சத்தை எட்டும் என்று அம்மாகாண கவர்னர் ஆன்ட்ரூ குவோமோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
நியூயார்க் மாகாணத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசங்கள், கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன. இவற்றை அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இந்த பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருப்பது வேதனையாக உள்ளது. நியூயார்க் மாகாணம் ‘ஆர்டர்’ செய்த 17 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் போதுமானவை அல்ல.
சீனா நன்கொடையாக அளித்த ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் வந்து சேர உள்ளன. இதற்காக சீன அரசுக்கும், அலிபாபா நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டம் பெற தயாராக இருக்கும் மருத்துவ மாணவர்களை மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X