search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து சம்பவம் நடந்த இடம்
    X
    கத்திக்குத்து சம்பவம் நடந்த இடம்

    பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல் - 2 பேர் பலி

    பிரான்சில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பாரீஸ்:

    பிரான்சில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

    இந்த நிலையில் அங்கு நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டிரோம் நகரில் சாலையில் நடந்து சென்றவர்களை மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மக்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் சற்றும் ஈவு இரக்கம் இன்றி கண்ணில் பட்டவர்களை விரட்டி சென்று கத்தியால் குத்தினார். இந்த கொடூர தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×