search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பெண்
    X
    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பெண்

    ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி - 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - திகைத்து நிற்கும் அமெரிக்கா

    அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
    நியூயார்க்:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

    உலகம் முழுவதும் 12 லட்சத்து 319 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64 ஆயிரத்து 667 பேர் உயிரிழந்துள்ளனர். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 

    கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்யும் காட்சி

    அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 72 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 

    தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×