என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
Byமாலை மலர்3 April 2020 3:09 AM GMT (Updated: 3 April 2020 3:09 AM GMT)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 245,080 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில் 115,242 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 13,915- ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினில் 112,065 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 10,348 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X