search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானின் தாக்குதல் ஹெலிகாப்டர்
    X
    ஆப்கானிஸ்தானின் தாக்குதல் ஹெலிகாப்டர்

    ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினர் வான்வெளி தாக்குதல் - 12 தலிபான்கள் பலி

    ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. 

    இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. 

    அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர். 

    இதனால், ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் கந்தஹார் மாகாணம் ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் விமானப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டதாக அரசுப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×