search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த காட்சி
    X
    கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த காட்சி

    50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - அதிரும் உலக நாடுகள்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
    ஜெனிவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. 

    உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

    தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 10 லட்சத்து 940 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 702 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 51 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 244 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

    அமெரிக்கா - 5,624
    இத்தாலி - 13,915
    ஸ்பெயின் - 10,096
    ஜெர்மனி - 1,089
    சீனா - 3,318
    பிரான்ஸ் - 4,503
    ஈரான் - 3,160
    இங்கிலாந்து - 2,921
    சுவிஸ்சர்லாந்து - 536
    துருக்கி - 356
    பெல்ஜியம் - 1,011
    நெதர்லாந்து - 1,339
    கனடா- 134
    ஆஸ்திரியா - 158
    தென்கொரியா - 169
    போர்ச்சீகல் - 209
    பிரேசில் - 252
    ஸ்வீடன் - 282
    டென்மார்க் - 123
    ஈக்வடார் - 120
    ரூமெனியா - 114
    பிலிப்பைன்ஸ் - 107
    இந்தோனேசியா - 170
    Next Story
    ×