என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கோ: மின்சாரம் பாய்ந்து 20 பேர் பலி
Byமாலை மலர்2 April 2020 12:53 AM GMT
காங்கோவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசின் பிரஸ்விலி மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கனமழை பெய்தது. அம்மாகாணத்தின் கின்டெலி பகுதியிலும் இடிமின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், கின்டெலி பகுதியில் கனமழையின்போது மின்னல்கள் மின்னியது. அப்போது அங்கு உள்ள இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகள் மீது மின்னல் தாக்கியது.
மின்னல்கள் தாக்கியதால் பல உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது மின்கம்பிகள் தரையில் நின்றுகொண்டிருந்த பலர் மீது விழுந்தது.
இதனால் உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் பலர் மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 20 பேர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X