search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
    X
    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா- ஐ.நா. எச்சரிக்கை

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
    ஜெனிவா:

    உலக நாடுகள் முழுவதையும் கொரோனா வைரஸ் ஒரு சேர பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உலக வல்லரசு நாடான அமெரிக்கா என்பதிலிருந்தே, அந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். வளர்ந்த நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பவில்லை. 

    இந்த சூழலில், 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான சுகாதார நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். 

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘ஐக்கிய நாடுகள் அவையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இது போல ஒரு உலக சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. சுகாதார நெருக்கடியை விட மிகவும் தீவிரமானது. இது ஒரு மனித நெருக்கடி என்றார். 

    ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட பிறகு, மிக மோசமான உலக நெருக்கடியாக,  ஏன் கொரோனா பெருந்தொற்றை நீங்கள் கருதுகிறீர்கள் என்று குட்டரெசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

    இதற்குப் பதிலளித்த குட்டரெஸ்,  ‘ஒருபுறம் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இன்னொரு புறம், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்றார். 

    மேலும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும்  பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய சுகாதார திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். 

    Next Story
    ×