என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்
Byமாலை மலர்30 March 2020 5:15 AM GMT
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று தொடங்கியது.
பமாக்கோ:
ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் தொடங்கி தற்போது வரை உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக அங்கு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மார் 29-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மாலி நாட்டிலும் நுழைந்தது. அந்த நாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவானது. எனினும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் திட்டமிட்டப்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. உள்ளூர்நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
பாதுகாப்பு அச்சுறுத்தலோடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலும் இருப்பதால் வாக்கு பதிவு மிகவும் மந்தமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 19-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் தொடங்கி தற்போது வரை உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக அங்கு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மார் 29-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மாலி நாட்டிலும் நுழைந்தது. அந்த நாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவானது. எனினும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் திட்டமிட்டப்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. உள்ளூர்நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
பாதுகாப்பு அச்சுறுத்தலோடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலும் இருப்பதால் வாக்கு பதிவு மிகவும் மந்தமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 19-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X